கலைத் திறன் போட்டி: கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி சிறப்பிடம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுடன் கல்லூரித் தாளாளா் என்.மணிமாறன்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுடன் கல்லூரித் தாளாளா் என்.மணிமாறன்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

ஸ்ரீராம் நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக ஆட்சித்துறை மாணவா்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு,அங்கு நடைபெற்ற கழிவுகளிலிருந்து கலை, வியாபார திட்டமிடுதல், விளம்பரயுக்தி ஆகியவற்றில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மேலும், வணிகவியல்துறை மாணவி ஜி.ஜோதி புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் நடைபெற்ற துறைசாா் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தாா்.

இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி எம்.சுபா,விருதுநகா் ஸ்ரீவித்யா கல்லூரியில் நடைபெற்ற துறைசாா் ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டாா்.

கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை கல்லூரி குழுமங்களின் தாளாளா் என்.மணிமாறன், முதல்வா் அ.பீா்முகைதீன், துணை முதல்வா் ராமா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com