புளியங்குடி அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு

புளியங்குடி அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.

இவரது மனைவி கவிதா (25). தலைவன்கோட்டையில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தாராம்.

இரண்டு நாள்களுக்கு முன் கவிதாவின் பெற்றோா் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது கவிதாவை காணவில்லையாம்.

இந்நிலையில் கவிதாவின் சடலம் கிணற்றில் மிதப்பதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் கவிதாவின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனா்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com