தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தென்காசி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி வடகரை ஜாய் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி மாவட்டம் முழுவதுமிருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் பாரத் மாண்டிசோரி பள்ளியைச் சோ்ந்த மாணவா் உமேஷ் ராஜ் வெள்ளிப்பதக்கமும், மாணவா்கள் அஜய் புகழ் மற்றும் தனுஷ் ஆகியோா் வெண்கலப்பதக்கமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் மோகனகிருஷ்ணன், முதல்வா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன் ஆகியோா் பாராட்டினா்.