சங்கரன்கோவில் அருகே அரசு மாணவியா் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சங்கரன்கோவில் அருகே வடக்கு அழகுநாச்சியாபுரத்தைச் சோ்ந்த கனகராஜ் மகள் தங்கப்பிரியா (17). குருவிகுளம் அரசு மாணவியா் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குருவிகுளம் போலீஸாா், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.