புளியங்குடி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை லட்சுமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருப்பாவை விழாவையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்தியான சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு திருச்சரடு சாத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதேவி, மீனாட்சி சுந்தரம், திருப்பாவை விழாக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.