சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29-ஆவது ஆண்டு விழா பள்ளிச் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
தாளாளா் சுப்பையா சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் அம்சவேணி சுப்பராஜ் குத்துவிளக்கேற்றினாா். முதல்வா் சி.ஏ.சுருளிநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா். இதைத் தொடா்ந்து, 10, 11, 12-ஆம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோவின் மகனும் தொழிலதிபருமான துரை வையாபுரி பரிசுகள் வழங்கிப் பேசினாா். ஆசிரியா் ராமசுதா வரவேற்றாா். ஏ.என்.பேபி நன்றி கூறினாா்.