சுந்தரபாண்டியபுரத்தில் 500 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழி குஞ்சுகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம், தென்காசி நிலவள வங்கித் தலைவா் சங்கரபாண்டியன், குலசேகரப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் அமல்ராஜ், அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், முத்துராஜ், கந்தசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.