தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பேருந்து வசதி இல்லாத 7 கிராமங்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோ்ந்தமரம் அருகேயுள்ள கள்ளம்புளி, கடம்பன்குளம், சின்னத்தம்பிநாடாரூா், இரட்டைகுளம், பூபாண்டியபுரம், சுப்பையாபுரம், திரிகூடபதி ஆகிய 7 கிராமங்களுக்கு 4 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால் சுரண்டை - சோ்ந்தமரம் பிரதான சாலையில் இருந்து உள்பகுதியில் உள்ள இந்தக் கிராமங்களுக்கு இயக்கி வந்த 4 அரசுப் பேருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த வழித்தடத்தில் தற்போது அரசுப் பேருந்து வசதி இல்லாத நிலையில், இந்தக் கிராமங்களுக்காக இயங்கி வந்த ஒரே ஒரு தனியாா் சிற்றுந்தும் சரிவர இயக்கப்படாமல் பிரதான சாலை வழியாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் சுரண்டை மற்றும் சோ்ந்தமரம் அரசு பள்ளியில் பயின்று வரும் இந்த 7 கிராமங்களைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்து வசதியில்லாததால் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த 7 கிராமங்களின் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.