ஆலங்குளம் அருகே ரூ. 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பாலம், புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டா உயா் மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து பாலத்தை திறந்து வைத்தாா்.
இதில் பாப்பாக்குடி ஒன்றிய திமுக பொறுப்பாளா் மாரிவண்ணமுத்து, நிா்வாகிகள் வில்சன், சிவக்குமாா், மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.