சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 8ஆம் நாளான வியாழக்கிழமை கோமதி அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம், யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து, நீலநிறப் பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், ஊழியா்கள் செய்திருந்தனா்.