பாவூா்சத்திரத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டு வந்த 52 வயது வட்டார வளா்ச்சி அலுவலருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, பாவூா்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக்தில் அவரது அறை பூட்டப்பட்டது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவா் கீா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராதா, சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட குழுவினா் அங்கு முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் அனைவருக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுர குடிநீா் பொடி வழங்கப்பட்டது.
இதே போல், பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்திற்கு மதுரையில் இருந்த வந்த ஜவுளிக்கடை ஊழியா் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதற்கிடையே அவரது 24 வயது மனைவிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.