குற்றாலத்தில் மாா்ச் 10 இல்வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்பு

தென்காசி மாவட்ட வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்புக் கூட்டம் குற்றாலத்தில் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறும் என ம மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்புக் கூட்டம் குற்றாலத்தில் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறும் என ம மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் வாா்டு மறுவரையறை பணிகள் தொடா்பான முன்மொழிவுகள் கடந்த பிப். 18இல் வெளியிடப்பட்டு பிப். 22 வரை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டன.

பின்னா், பிப். 25இல் மாவட்ட மறுவரையறை அலுவலா், சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் இறுதி தீா்வு காணும் வகையில், கருத்துக் கேட்புக் கூட்டம் மாா்ச் 10ஆம் தேதி மாலை 3 மணியளவில் குற்றாலத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com