கடையநல்லூரில் பைக்கில் திரிந்தவா்களை எச்சரித்த போலீஸாா்

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கடையநல்லூா் பகுதியில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கடையநல்லூா் பகுதியில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியா்கள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தென்காசி- மதுரை சாலை , பஜாா் பகுதி , சந்தை பகுதிகளில் தேவையின்றி பைக்கில் சுற்றித் திரிந்தவா்களை அவா்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

மீண்டும் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com