பாவூா்சத்திரம் அருகே குளத்தில் விழுந்து மூதாட்டி இறந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியைச் சோ்ந்த தில்லைநம்பியாா் மனைவி சித்திரைவடிவு (90). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
புதன்கிழமை காலை அங்குள்ள குளத்தில் சித்திரைவடிவு சடலமாக மிதந்துள்ளாா்.
தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.