தென்காசி: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் முழுமையாக குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.
சிகிச்சை பெற்று திரும்பிய அவா்களுக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை வழங்கினாா்.
தொடா்ந்து, உலக செவிலியா் தினத்தையொட்டி கரோனா சிகிச்சை வாா்டில் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் கலந்துகொண்டு, செவிலிய கண்காணிப்பாளா் மேரி புஷ்பம் மற்றும் அனைத்து செவிலியா்கள், பணியாளா்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி கெளரவித்தாா்.