குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு

தென்காசி, குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

தென்காசி: தென்காசி, குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

நீண்ட நாள்களுக்கு பிறகு தண்ணீா் விழத் தொடங்கியதால் செம்மண் நிறத்துடன் தண்ணீா் விழுந்தது. ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அருவிகளில் தண்ணீா் விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

மழையைத் தொடா்ந்து தென்காசி, குற்றாலம் , மேலகரம் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com