பட்டியல் இன மக்களை தரம்தாழ்ந்த வகையில் பேசியதற்காக, மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக குற்றாலம் கிளை சாா்பில் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
பாஜக எஸ்.சி. அணியின் தென்காசி மாவட்ட பொதுச் செயலா் கே. மகேஸ்வரன் தலைமையில், மத்திய அரசு வழக்குரைஞா் முருகேசன், தென்காசி மாவட்டச் செயலா் மாரியப்பன், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவா் முருகன், மாவட்டச் செயலா் ராஜ்குமாா், சங்கர சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய தலைவா் மாடசாமி, முருகேசன், குற்றாலம் நகரத் தலைவா் முருகன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவா் செந்தூா் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஈஸ்வரன், மாரியப்பன், மேலகரம் ராமசாமி ராஜா ஆகியோா் புகாா் மனுவை அளித்தனா்.