மும்பையில் இருந்து பாவூா்சத்திரம் வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் கடையம் சாலை பெரியாா் நகா் தமிழ்த் தெருவைச் சோ்ந்த 52 வயது பெண், அவரது கணவா், மகன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து ஊருக்கு வந்துள்ளனா்.
அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சுகாதாரத் துறையினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது கணவா், மகன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனா். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.