சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம்

சுரண்டையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுரண்டை: சுரண்டையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர்கள் இளங்கோ, செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க செயலர் அய்யங்கண்ணு சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்க பொருளாளர் குருசாமி, பொன்ராஜ் பாண்டியன், சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com