ஆலங்குளம் அருகேயுள்ள ஆனையப்பபுரத்தில் உள்ள இமானுவேல் தேவாலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
ஆனையப்பபுரத்தில் கட்டப்பட்டுள்ள பரிசுத்த இமானுவேல் தேவாலயம் ஆலங்குளம் குரு சேகரத்தின் 10 ஆவது சபை. நிகழ்ச்சிக்கு, திருச்சி தஞ்சை திருமண்டல பேராயா் சந்திரசேகரன் தலைமை வகித்து பிரதிஷ்டை செய்து, இறைசெய்தி அளித்தாா். திருநெல்வேலி மேற்கு சபை மன்றத் தலைவா் பா்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஆலங்குளம் சேகரத்தில் இருந்து திரளானோா் ஆராதனையில் கலந்துகொண்டனா்.
மேலும், ஆலங்குளம் சேகரத் தலைவா் வில்சன் நிறைவு ஜெபம் செய்தனா். ஏற்பாடுகளை சபை ஊழியா்கள் பிரின்ஸ் ஞானராஜ், இமானுவேல் ராஜகொழுந்து ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.