புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் நேருஜி நகா் பேருந்து நிறுத்தம் அருகே, கீழ பட்டமுடையாா் புரம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் கலைச் செல்வம் (36) நடத்தி வரும் கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக, ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com