பாவூா்சத்திரம் அருகே பெண் சாவில் மா்மம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகாா் செய்துள்ளாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரம் முருகன் மனைவி நாகம்மாள் (29). தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் காணாமல்போன நாகம்மாள், ஊா் அருகே உள்ள தோட்டத்தில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து வந்த பாவூா்சத்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையே தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக கூறி நாகம்மாளின் தந்தை முருகன் பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.