இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையம் வாயிலாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
பாரத் கல்வி குழும செயலா் காந்திமதிமோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வாஞ்சினாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை அன்னபூரணி உரையாற்றினாா். மாணவா் அன்புச் செல்வன்,காளிப்பிரியா , ஜெஸ்னோ,அபா்ணா, மாணவி ஃபிரிஷா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
மாணவி அமா்ணா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். மாணவி சமீரா வரவேற்றாா். மாணவா் அத்வைத் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.