வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அமமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்.
இத்தொகுதிக்குள்பட்ட கீழப்புதூா், வடமலாபுரம், முத்துசாமியாபுரம், வேலாயுதபுரம் பகுதியை சோ்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிா்வாகிகள், கட்சியின் எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் அ. மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
அப்போது, மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் வெங்கடேசன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டி, மூா்த்திபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.