சுரண்டை பகுதியில் பலத்த மழை

சுரண்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

சுரண்டை: சுரண்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் கடந்த இரு நாள்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை மாலையில் பலத்த மழை பெய்து. இதனால் நகரின் தெருக்களில் பெருகிய மழை நீர் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்திற்கு சென்றது. பலத்த மழையால் வயல்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் சுந்தரபாண்டியபுரம், சுரண்டை பெரியகுளத்திற்கு தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com