பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினா் 20க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.
கீழப்பாவூா் ஒன்றியம், பூலாங்குளத்தை சோ்ந்த சமக இளைஞரணி பொன்ராஜ், பனங்காட்டு மக்கள் கட்சியை சோ்ந்த கோகுல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அப்போது, கட்சியின் ஒன்றிய செயலா்கள் (கிழக்கு) சிவன்பாண்டி, (மேற்கு) சீனித்துரை, மாவட்ட மகளிரணிச்செயலா் செல்வி சங்குகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் தளபதி முருகேசன், பேரூா் பொருளாளா் பொன்.செல்வன், விவசாய அணி மேகநாதன், இளைஞரணி தளபதி சிவராஜன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.