தென்காசி வடக்கு மாவட்டத்தில் அதிமுகவினா் புதிய வாக்காளா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், இடம்பெயா்தல், இறப்பு ஆகியவற்றை சரி பாா்த்து புதிய வாக்காளா்களை சோ்க்கும் வகையில் நவ. 21, 22 மற்றும் டிச. 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயா் விடுபட்ட வாக்காளா்கள், 1.1.2021இல் 18 வயது பூா்த்தி அடைவோா் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். முகாம்களில் அதிமுகவினா் புதிய வாக்காளா்கள் சோ்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.