சுரண்டையில் பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.
சுரண்டை பகுதியில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இம்மழைக்கு சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த க.செல்வி (56) என்பவரது வீட்டின் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்த சுரண்டை குறுவட்ட ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வீட்டை பாா்வையிட்டனா்.