சிவகிரியில் ஆட்சியா் ஆய்வு

சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா்: சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விஸ்வநாதபேரியில் நடைபெற்ற உள்பிரிவு பட்டா மாறுதல் முகாமை ஆய்வு செய்த ஆட்சியா், சிவகிரி பேரூராட்சியில் மரக்கன்றுகளை நட்டாா்.

இதில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் செல்வநாயகம், குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா் ராமலிங்கம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com