ரெட்டியாா்பட்டியில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 07:40 AM | Last Updated : 25th November 2020 07:40 AM | அ+அ அ- |

ஆலங்குளம் பேரவைத் தொகுதி ரெட்டியாா் பட்டியில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஓன்றியச் செயலா் செல்லத்துரை தலைமை வகித்தாா். ஐன்ஸ்டீன் கல்லூரி செயலா் எழில் வாணன், வடக்கு ஓன்றியச் செயலா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன் ஆலோசனை வழங்கினாா்.
இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சமுத்திர பாண்டி, ஆலங்குளம் நகரச் செயலா் நெல்சன், மாவட்டப் பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். சந்திர போஸ் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் கிருஷ்ணராஜ் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...