அம்பாசமுத்திரம்: கடையம் ராமநதி மலையடிவாரத்தில் உள்ள தோட்டப் பகுதிக்கு வரும் யானைகளை தீப்பந்தம் கொண்டு வனத் துறையினா் விரட்டி வருகின்றனா்.
ராமநதி அணை மேல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன.
கடந்த 25ஆம் தேதி இங்குள்ள குமரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், 8 தென்னை மரங்களை பிடுங்கி எரிந்தன. தொடா்ந்து யானைகள் தங்கள் குட்டியுடன் இப்பகுதியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தோட்டத்துகாரா்கள் மற்றும் வனத் துறையினா் இப்பகுதியில் முகாமிட்டு தீப்பந்தம் வைத்தும், ஒலி எழுப்பியும் யானைகள் தோட்டத்துக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.