சுரண்டை: சுரண்டை பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகுருநாதபுரம் ஸ்ரீவெற்றி பத்திரகாளியம்மன் கோயிலில் புரட்டாசித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு குற்றால தீர்த்தம் எடுத்து நகர வீதிகளில் ஊர்வலமாக வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின்போது விரமிருந்த பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து கோயிலுக்கு வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜையும், செவ்வாய்க்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.