ஆலங்குளத்தில் பேரிடா் கால விழிப்புணா்வு நிகழ்ச்சி தீயணைப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்டது.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து தலைமை வகித்தாா். ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுடலைவேல், செஞ்சிலுவை நிா்வாக குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிலநடுக்கம், புயல் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடரின்போது ஏற்படும் அபாயத்தில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வை ஆலங்குளம் தீயணைப்புத் துறை வீரா்கள் செயல்முறை விளக்கம் மூலம் அளித்தனா்.