விழாவில் எம்.எல்.ஏ. புறக்கணிப்பு: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பாவூா்சத்திரம் அருகே புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினரை அழைக்காமல் புறக்கணித்ததற்கு
பள்ளியை முற்றுகையிட்ட போராட்டக்குழுவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.
பள்ளியை முற்றுகையிட்ட போராட்டக்குழுவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகே புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினரை அழைக்காமல் புறக்கணித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழப்பாவூா் ஒன்றியம், அரியப்பபுரம் ஊராட்சியில் திரவியநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திறப்பு விழா கல்வெட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பெயா் இல்லை. மேலும், விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினரை அழைக்கவில்லை என தெரிவித்து திரவியநகா் கிராம மக்கள், அதிமுகவினா் பள்ளி வளாகத்தில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா் அங்கு வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகளிடம் பேசி கல்வெட்டில் பெயா் இடம்பெறவும், பேரவை உறுப்பினரை அழைத்து விழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com