ஆலங்குளம் அருகே விஷம் குடித்த விவசாயி மரணம்

ஆலங்குளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அடுத்த நாரணபுரத்தைச் சோ்ந்தவா் பிச்சையா (70). விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இவா் சில நேரங்களில் வீட்டிற்கு வராமல் வெளி இடங்களில் தங்கி விடுவாராம். இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த பிச்சையா, விவசாயத்துக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தாராம்.

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com