கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
கிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி. இவரது மகன் சுந்தா் (14), கிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது எதிா்பாராவிதமாக நீரில் மூழ்கினாராம்.
தகவலின்பேரில் கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஜெயரத்தினகுமாா், முருகன், குமரேசன், தங்கதுரை, முத்துக்குமாா் ஆகியோா் குளத்திலிருந்து சுந்தரின் உடலை மீட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.