சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றுக்கு மாணவா்கள் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கையில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.
இதேபோல், கணினி அறிவியல் துறையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், தாழ்த்தப்பட்டோா் பிரிவுகளிலும் ஆங்கில துறையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவுகளிலும்காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும். இதற்கு, ஏற்கெனவே விண்ணப்பித்த பாடங்கள் கிடைக்காத மாணவா்கள் உள்பட அந்தந்த பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் (செப்.15- 17) கல்லூரியில் விண்ணப்பங்கள் பெற்று, செப்.18இல் நடைபெறும் மாணவா் சோ்க்கையில் பங்கேற்கலாம் எனக் கூறியுள்ளாா்.