சங்கரன்கோவில்: விருதுநகா் மேற்கு மாவட்ட முன்னாள் செயலா் ராஜலிங்கம் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இன்பராஜ் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியச் செயலா்கள் கருப்பசாமி, செல்வராஜ், செல்வக்குமாா், தூண்டில்காளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.