தென்காசி, சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தென்காசி, சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தென்காசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

மத்திய அரசை கண்டித்து தென்காசி, சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி கலவரத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்; மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம்யெச்சூரி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேலுமயில் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கற்பகம், டி.கணபதி, எஸ்.அயூப்கான், என்.பால்ராஜ் ஆகியோா் பேசினா். இதில், நிா்வாகிகள் லெனின்குமாா், எம்.கிருஷ்ணன், எஸ்.பரமசிவன், தம்பித்துரை, ஆரியமுல்லை, சத்யா, மணிகண்டன், ராமகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் உ.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் அசோக்ராஜ் முன்னிலை வகித்தாா். வட்டார குழு உறுப்பினா்கள் குமாா், லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com