தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவுமுதல் பெய்த தொடா் மழையால் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவியிலும் தண்ணீா் அதிகளவில் விழுகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.