செங்கோட்டையை அருகேயுள்ள புளியரை கிராமத்தில் நெல் விதைப்பண்ணை ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துணை இயக்குநா் நல்லமுத்துராஜா தலைமையில் அதிகாரிகள் நெல் விதை பண்ணை திடலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஆய்வின்போது விதைப் பண்ணை விவசாயிகளிடம் பயிா் பாதுகாப்பு முறைகள், விதைப் பண்ணை திடலில் கலவன் அகற்றுவது ஆகியவை குறித்து பேசினாா். அப்போது, செங்கோட்டை வட்டார உதவி விதை அலுவலா்கள் நாகராஜன், முருகன் மற்றும் விதை பண்ணை விவசாயி பெரியஅலி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.