முக்கூடல் அருகே வேலியில் சிக்கி மான் பலி

முக்கூடல் அருகே கம்பி வேலியில் சிக்கி மான் உயிரிழந்தது.

முக்கூடல் அருகே கம்பி வேலியில் சிக்கி மான் உயிரிழந்தது.

முக்கூடல் அருகேயுள்ள தாளாா்குளத்தில் உள்ள அங்கான்வாடி மையம் பகுதியில் அமைந்துள்ள முள் வேலியில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளது.

தகவலின் பேரில் வந்த திருநெல்வேலி வனச் சரக வன காப்பாளா்கள் டென்சிங், முருகையா, வேட்டை தடுப்பு காவலா் முருகன் ஆகியோா் முன்னிலையில் வடக்கு அரிய நாயகி புரம் அரசு கால்நடை மருத்துவா் ராதாகிருஷ்ணன் அந்த மானுக்கு பிரேத பரிசோதனை செய்த பின்னா் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com