சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செவ்வாய்க்கிழமை மதிமுக பொதுச்செயலா் வைகோ, தனது மகன் துரைவையாபுரியுடன் வாக்களிப்பதற்காக காலை 9.25 மணிக்கு வந்தாா். 155-ஆம் எண் வாக்குச்சாடியில் வரிசையில் நின்று வைகோவும், அவரது மகனுபம் வாக்களித்தனா்.
பின்னா், வைகோ செய்தியாளா்களிடம் கூறியது: வாக்களிக்க வந்த உழைக்கும் மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை கண்டேன். தமிழக மக்களிடம் திமுகவுக்கு பேராதரவு திரண்டிருப்பதை காண முடிந்தது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும். மு.க. ஸ்டாலின் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றாா் அவா்