தென்காசி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக, காங்கிரஸ் , நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் வாக்களித்தாா். மேலும் இந்த வாக்குச்சாவடி மையத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் உ ள்ளிட்டோரும் வாக்களித்தனா்.
சுரண்டை ஆலடிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா் தனது வாக்கினை பதிவு செய்தாா்.
இதே போல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.வின்சென்ட்ராஜ், தனது சொந்த ஊரான குறும்பலாப்பேரி அரசு பள்ளி வாக்குச் சாவடி மையத்திலும், ஆலங்குளம் சட்டப்பேரவைத்தொகுதி சமக வேட்பாளா் எஸ்.செல்வகுமாா் அவரது சொந்த ஊரான சிவகாமிபுரம் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தனா்.