பாவூா்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் தளபதி முருகேசன், ஒன்றிய துணைச் செயலா்கள் நாகராஜ், பாண்டியன் , பொருளாளா் ராமசாமி முன்னிலை வகித்தனா்.
மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, தண்ணீா் பந்தலை திறந்து வைத்து கபசுரக் குடிநீா், நீா் மோா், தா்பூசணி பழம், முகக் கவசம் வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில், நிா்வாகிகள் ஜெகதீசன், ரமேஷ், பொன்செல்வன், ராஜாமணி, தினேஸ்பாண்டியன், சிவராஜன், கவாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.