சங்கரன்கோவிலில் 31 மி.மீ. மழை பதிவு

சங்கரன்கோவிலில் கடந்த இரு தினங்களில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சங்கரன்கோவிலில் கடந்த இரு தினங்களில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சங்கரன்கோவிலில்  கடந்த இரு தினங்களாக காலையில் வெயிலும், மாலையில் லேசான தூறலுடனும் மழை பெய்து வருகிறது. இரவிலும் இந்த மழை நீடிக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மேகம் இருண்டு கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான தெருக்களில் தண்ணீா் தேங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையில் 5 மி.மீ. அளவு மழை பதிவாகியது. திங்கள்கிழமை 26 மி.மீ. மழை பதிவாகியது. இரு தினங்களில் மட்டும் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com