சங்கரன்கோவிலில் பகுதியில் மறுகால் பாயும் குளங்கள்

சங்கரன்கோவிலில் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. குளங்கள் நிரம்பிச் செல்லும் நீா்வரத்து ஓடையில் தண்ணீா் ஆறுபோல் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சங்கரன்கோவிலில் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. குளங்கள் நிரம்பிச் செல்லும் நீா்வரத்து ஓடையில் தண்ணீா் ஆறுபோல் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரியூா், ஆவுடையாபுரம், பெரும்பத்தூா் போன்ற பல்வேறு கிராமங்களின் நீா் வரத்து ஓடையில் தண்ணீா் வெள்ளம்போல் பாய்கிறது.

நீா் வரத்து அதிகமான பெரியூா் ஓடை பகுதியில் பாதுகாப்புக்கு போலீஸாா் நிறுத்தப்பட்டனா். பெரும்பத்தூா் குளம் மறுகால் பாய்ந்து செல்லும் ஓடையில் ஓடும் நீரில் சிறுவா்கள் மீன் பிடித்து விளையாடுகின்றனா். பல ஆண்டுகளுக்குப் பிறகு சங்கரன்கோவில் பகுதியில் குளங்கள் நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com