பாவூா்சத்திரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்

பாவூா்சத்திரத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம் கே.டி.சி. நகா் வடக்குப் பகுதிக்குச் செல்லும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை அகற்ற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் இரா. சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், காவல் துறையினா் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதனிடையே, ஒரு சாலையிலிருந்த ஆக்கிரமிப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மற்றொரு சாலை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவாா்த்தைக் குழு சாா்பில் உறுதியளிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com