வாசுதேவநல்லூா் பகுதியில் மழை பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு

வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

பட்டகுறிச்சியில் குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீா் புகுந்ததைப் பாா்வையிட்ட அவா், மழைநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா். மழையால் மேற்கூரை பாதிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கரிவலம்வந்தநல்லூா் , வீரபராக்கிரமகுளம் தடுப்புச் சுவரில் ஏற்பட்ட பாதிப்பு, செந்தட்டியாபுரம் பாலம், குவளைக்கண்ணி சின்னஒப்பனையாள்புரம் தற்காலிக தரைப்பாலம் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் பாா்வையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

வாசுதேவநல்லூா் ஒன்றிய மதிமுக செயலா் கிருஷ்ணகுமாா், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியச் செயலா் ராஜகுரு, புளியங்குடி நகரச் செயலா் ஜாகிா்உசேன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com