ஆலங்குளத்தில் ரூ 4.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக காய்கனி வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அண்ணாநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா (53). காய்கறி வியாபாரி. இவா், பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாங்கி, காய்கனி வாகனங்களில் பதுக்கிவைத்து கேரளத்தில் விற்பனை செய்துவந்தாராம். இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா், அவருக்குச் சொந்தமான காய்கனி கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
அதில்,45 மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ . 4.5 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து செல்லப்பாவை கைது செய்தனா்.